Thursday, January 26

தாய்மை

தாய்மை என்னும் தலைப்பு கேட்டு
தோன்றிய எண்ணம் வேறு
படைத்த கருத்து வேறு..
சத்தியமாய் இது
சொந்தக்கதை பாதி என் அன்னை
நொந்தக்கதை பாதி...


தாய்மை என்பதை ஓர் பதவியாய்
எண்ணி இறுமாந்திருந்தாள்
தாய்மை என்பதை ஓர் பதவியாய்
இறுமாந்திருந்தாள்.
அது கணக்காளர் வேலையாய் போகுமென தெரியாமல்..

மாத விலக்கு கணக்கெல்லாம் முடிந்ததப்பா என்றிருந்த வேளை,
முடியவில்லை இதோ என்று
அடுத்த கணக்காய் தொடங்கிற்று
ஐயிரண்டு திங்கள் கணக்கு..

பத்து மாதம் முடிந்ததய்யா...
பச்சிளந்தளிர் ஒண்ணு
பார்க்க பார்க்க
பரவசம் மூட்டிற்று..

 தாய்மை என்பதை ஓர் பதவியாய்
எண்ணி இறுமாந்திருந்தாள்..

வருடங்கள் ஓடி மீண்டும்
கணக்கு வழக்குகள் முடிந்து
ஆச்சு இன்னுமொண்ணு..

பதவியாய் எண்ணி
பகுமானமாய் இருந்தவள்
பதவிக்கனம் தாங்காமல்
இறக்கி வைக்க முடியாமல்
தவித்தாள்..

இன்னும் பத்து வருடம் போனால்
பதவி இருக்கும்.
பதவிச்சுமை இருக்காது
என மனக்கணக்கு போட்டாள்

பத்தென்ன இன்னும் கூட
இரண்டு வருடம் ஆச்சு
தலைச்சுமை கூடியபடியே..
குறையக் காணோம்...

அவள் கணக்கே முடியவில்லை
மூச்சு விட நேரமின்றி..
தொடங்கிற்று மற்றுமொரு கணக்கு..
நல்லவேளை இது
பழைய கணக்கல்ல
புது கணக்கு..
பெண்ணுக்கும் சேர்த்து கணக்கு
போடத் துவங்கியருந்தாள்...

பள்ளியிறுதி கணக்கை
பல்லைக் கடித்து முடித்தவளுக்கு மதிப்பெண் பல பெற்றவளுக்கு
இரண்டே கணக்குகள்
தனக்கும் மகளுக்குமாய்
தவித்தே போனாள்....

மாதக்கணக்கில் மூழ்கியவளுக்கு
வருடக் கணக்கு போனது
தெரியவில்லை

இன்னும் போச்சு  வருடம் மூணு
அடுத்த பெண்ணின் கணக்கும்
சேர்ந்ததய்யா அக்கௌண்டில்..

நல்லவேளை இரண்டோடு
நிறுத்தியதற்கு நன்றி சொன்னாள்
இறைவனுக்கு..
இப்போது....

மூன்று கணக்குகள் முட்டி மோதி
சமாளித்தவள்
கொஞ்சம் மூச்சு விட
கால தேவன் நிப்பானா
அவன் கணக்கை அவன் பார்க்க
இன்னும் ஆச்சு வருடங்கள்...

கணக்கிலடங்கா வரன் தேடி
எண்ணிலடங்கா இடந்தேடி
முதல்கடமை முடித்தாளய்யா..

கணக்கு வேலை முடியும் என்று
கணக்கு போட்டவள் நெஞ்சம்
இப்போதுதான் கவனமாய் போட்டது
பெண்ணின் மாதக்கணக்கை

மகளுக்கு நாள் தள்ளியதில்
அப்பாடா என்றவளின் நெஞ்சத்தில்
இருந்தது என்னவோ
யாமறியோம் பராபரமே

ஐயிரண்டு மாதம் கணக்கு முடிய
பிறந்தது பேரன் என்றவுடன்
பேரானந்தம் அடைந்தாள்...
எண்ணிக்கை நான்காகா
ஆனந்தம்..

தாய்மை என்பதை ஓர் பதவியாய்
இறுமாந்திருந்தாள்.
அது கணக்காளர் வேலையாய் போகுமென தெரியாமல்..

இருந்தும்...
கணக்கு போட்டு வாழ்ந்தாலும்
கணக்காளர் வேலை பார்த்தாலும்.
பெண்ணாய் பிறந்த ஜீவன்
மட்டும் அறியும்
தாய்மை பதவி அல்ல
உணர்வென்பதை...

இந்தக்கணக்கு மட்டும்
இல்லையெனில்
இல்லை தாய்மை என்னும் உணர்வு

தாய்மையை உணர
பெண்ணாய் தோன்றிட வேண்டும்
தாய்மையை  உணர
தென்னாடுடையவன் கூட
தாயுமானவானாய் ஆக
பெண்ணாய் மாறிடல் வேண்டும்..

தாய்மை மட்டுமே
தன்னலம் பார்க்காது

தாய்மை மட்டுமே
தன்பசி நோக்காது..

தாய்மை மட்டுமே
தன்கணக்கு பார்க்காது