Wednesday, August 16

புரிந்ததும் புரியாததும்


அன்பினும் சிறந்ததும் ஏதுமில்லை
அறத்தினும் சிறந்ததும் ஏதுமில்லை
குணத்தினும் சிறந்ததும் ஏதுமில்லை
பொறுத்தலினும் சிறந்ததும் ஏதுமில்லை
இன்சொல்லினும் சிறந்ததும் ஏதுமில்லை
உறவினும் சிறந்தது ஏதுமில்லை
நட்பினும் சிறந்தது ஏதுமில்லை

இதனையெல்லாம் போற்றுதலில்
இதனையெல்லாம் கடைப்பிடித்ததில்
தொலைத்து விட்டேன் நான் என்னும் என்னை....

நான் என்னும் என்னை மீட்டு வருதலின்
வழி  ஏதும் தெரியவில்லை..
தெரிந்த வழிகளிலெல்லாம்
ஓங்கியோ ஓரமாகவோ தெரிவது
அன்பும் அறனும் குணமும்
இன்சொலும் பொறுத்தலும் உறவுமே....
இவற்றை மீறி எனைக் கண்டடைதலின்
வழி உரைப்பீர்!
தம்மைக் கண்டடைந்த பெரியோரே...