Showing posts with label கலைஞருக்கு வாழ்த்து. Show all posts
Showing posts with label கலைஞருக்கு வாழ்த்து. Show all posts

Saturday, June 3

கலைஞருக்கு வாழ்த்து


சத்தியமாக கவிதை இல்லை...
வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் மட்டுமே.....

வாயார வாழ்த்தி
வாழ்த்துரை வழங்க
வயது தேவையில்லை
என்று சொல்லி விட்டார் கமல்..

எழுதினாலும் எழுத விட்டாலும்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
நீ அறிய போவதில்லை என்பது நிதர்சனம்.

என்னுடைய அறியா வயதிலே
அரசியல் அறிவு திணிக்கப்பட்டது
உன் மூலமே..
புரிந்ததோ புரியாமலோ

நான் தீவிர ஆத்திகம்
இருந்தும் நாத்திகனான
உன்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டேன்..

எனக்கு ஓட்டு போடும் தகுதி வரும்போது
என் ஓட்டு கலைஞருக்கே என்று சொல்லித் திரிந்தேன்..
காரணம் கேட்பவர்களிடம்
பதில் சொல்லத் தெரியாமல்...

இன்றுவரை உன்னுடைய
எந்த மேடைப்பேச்சையும்
நேரில் கேட்டதில்லை...
தொலைக்காட்சியில் கண்டதுண்டு...
எழுத்துகளைப் படித்திருக்கிறேன்.

குடும்ப அரசியலுக்கு
உதாரணமாய் நீ
கிண்டலடிக்கப் பட்டாலும்,
அம்மாவின் மறைவிற்குப் பின்னும்
இன்றைய உன் 94ம் பிறந்தாநாள கொண்டாட்டம் கண்டும்
மீண்டும் நான் அழுத்தமாக
என்னுள் சொல்லிக் கொண்டேன்
குடும்பம் முக்கியம் பெண்ணே!!!.

உன்னைப்போல் பன்முகம் கொண்ட
தலைவர்
இனி தமிழகம் காணுமா?
காத்திருக்கிறோம்....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா....