Monday, December 17

என்னைப் பொறுத்தருள்வாய் சிவனே...


ஆதியும் அவனே
அந்தமும் அவனே
ஒளியும் அவனே
இருளும் அவனே

புகழும் அவனே
இகழ்வும் அவனே
மலையும் அவனே
மடுவும் அவனே

புன்னகையும் அவனே
கண்ணீரும் அவனே
சொல்லும் அவனே
செயலும் அவனே

பாசமும் அவனே
பந்தமும் அவனே
விருப்பும் அவனே
வெறுப்பும் அவனே

கல்லும் அவனே
புல்லும் அவனே
தீதும் அவனே
நன்றும் அவனே

புயலும் அவனே
தென்றலும் அவனே
தாயும் அவனே
தந்தையும் அவனே

ஈசனும் அவனே
ஈஸ்வரியும் அவனே
நானும் அவனே
நீயும் அவனே
எல்லாம் அவன்தான் எனில்..

இன்னும் எனக்கு
ஊனக்கண் எதற்கு?
ஆசைகள் எதற்கு?
எதிர்பார்ப்பு எதற்கு?
ஏமாற்றம் எதற்கு?

வெற்றிகள் எதற்கு?
தோல்விகள் எதற்கு?
உறவுகள் எதற்கு?
பகைகள் எதற்கு?

உறக்கம் எதற்கு?
விழிப்பு எதற்கு?
ஆட்சி எதற்கு?
அதிகாரம் எதற்கு?

யோகமும் தெரியாது
வேதமும் தெரியாது
கண்மூடி அமர்ந்து செய்யும்
தவமும் தெரியாது
ஏதும் தெரியாத நான்
எல்லாம் அறிந்த அவன்

எப்போதும் என்னைப் பொறுத்தருள்கிறான்..
இப்போதும் பொறுத்தருள்வாய்
என் சிவனே!!!
ஓம் நமசிவாய....
----கோகிலவாணி கார்த்திகேயன்---