Wednesday, April 15

இன்றைய கையறுநிலை...

இதுநாள்வரை அறிந்தவற்றுள்
உண்மைகள் சில
உண்மையானவையாகவே
தொடர்கின்றன..
பொய்கள் சில
பொய்யானவையாகவே தொடர்கின்றன. 

உண்மைகளில் பல
பொய்யாக இருப்பதும்...
பொய்களில் பல
உண்மைகளாக இருப்பதும்....
விதி என்பதா?
சதி என்பதா?

எது உண்மை எது பொய்
என அறிந்தவர்
உரைக்காத வரை...
இங்கிருப்போர்
உண்மை அறிவதில்லை.
உண்மை அறிவோர்
இங்கிருப்பதில்லை

பொய்நிறை உலகம் செய்ய ஓயாஉழைக்கும் உத்தமரே
அறிவீரா?..
மெய்நிறை உலகம் ஆக்க
செய்யவேண்டியவை
ஏதுமில்லை என்று.

ஆடும்வரை ஆடுங்கள்..
காலம மாறும்வரை..
காத்திருப்போம் நாங்கள்.