Monday, May 20

வாழ்க்கை

 கூடைநிறைய பூக்கள்

எடுக்க எடுக்க 

மகிழ்ச்சிப்பூக்களாய்

மல்லிகைப் பூக்கள்

சரம் தொடுத்துக் கொண்டே வந்தேன்.


சில கண்ணிகள் தொடுத்த பின்

கூடையில் கைவிட

எதிர்பாரா விதமாய் 

இம்முறை

கனகாம்பரப் பூ.

என்ன செய்வதென்று திகைத்துப் பின்

அதையும் தொடுக்கத் தொடங்கினேன்.


பத்த்க் கண்ணிகள் முடிந்த பின்னே 

மீண்டும் மல்லிகை.

முகம் மலர

தொடர்ந்தேன் தொடுத்தலை.


இப்படியே பூக்கூடை காலியாக

முழுதுமாய் பார்க்கிறேன்.

வண்ணமயமான கண்ணிகளால்

தொடுக்கப்பட்ட

என்வாழ்க்கை இருந்தது

என் கையில்.


நல்லவேளை!

பிடிக்காத கனகாம்பரத்துக்காய்

பூத்தொடுத்தலை நிறுத்தாது 

போனேனே இறைவனே!!