Thursday, January 21

ஒற்றை விளக்கு


 ஒற்றை விளக்கு

ஒளிவெள்ளம் பாய்ச்சி
தனித்திருக்கிறது.

இருள்நிறை இரவில்
இருள்நீக்கும் நிலவாய்
தனித்திருக்கிறது.

புயல் அடிப்பினும்
சிதறா ஒளியாய்
தனித்திருக்கிறது.

காற்றில் ஆடாது
கனவாய் கலையாது
தனித்திருக்கிறது.

எரிவது ஒன்றே
என்கடன் என்று
தனித்திருக்கிறது.

ஒளிபெற்ற உயிர்கள்
மணல் உதறிச் சென்றாலும்
மனங்கலங்கா ஒற்றை விளக்கு
தனித்தே இருக்கிறது..