Thursday, May 26

விழியுடனான ஓர் உரையாடல் -இப்படிக்கு வண்ணத்துப்பூச்சி

மையுண்ட நீயும்

தேனுண்ட நானும் 

மயங்குவோம்..

மயக்குவோம்.


இன்று ஏனோ

உன் பார்வையில் 

ஒளியில்லை..

உயிரில்லை..


வருவேன் என்றவர்

வரவில்லையா?

வரவியலா இடம்

சென்று விட்டாரா?


பசலை பூத்த நீ

படபடக்க மறந்தாயா?

உன் நாண படபடப்பே

நமக்கான ஒப்புமை.


அதனைத் தொலைத்து

எதனைப் பெறுவாய்?

சென்றதினி மீளாது

சென்றவரும் மீளார்..


படபடப்பை மீட்டெடு

பசலை போக்கு

உயிர்கொள்

உணர்வு பெறு


எவரும் இல்லை

என எண்ணும் போது

நான் மீண்டும் வருவேன்.

உனை மீட்டுத் தருவேன்.