Monday, May 11

வாழ்க வையகம்

பத்து  தேனீக்கள் படையெடுத்து வந்தால்
பதுங்க முடியாது.
நான்கு நாய்கள் தெருவில் துரத்தினால்
நழுவ முடியாது.
ஒற்றை பாம்பு - ஒற்றை யானை துரத்த
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

ஆனாலும் அகந்தை..
நான் மனிதன் என்ற மமதை.
என் நாடுதான் பெரியது;
என் மொழிதான் சிறந்தது;
என் இனம்தான்..
என் மதம்தான்..
என் சாதிதான் ...

அகந்தை பிடித்தலையும் மனிதனை
அஞ்சி நடுங்கும் அற்பனை
அச்சுறுத்த விலங்குகள் எதற்கு?
வெறும் பசி போதாதா?
வெறும் பயம் போதாதா?

இருப்பினும்
இன்னமும்
உலகம் உயிரோடு இயங்குவது
நல்லோர் ஒருவர் பொருட்டுதான்..

நல்லோராய் இருப்போம்.
நானிலம் தழைக்கச் செய்வோம்.
வாழ்க வையகம்..