Thursday, February 28

மரக்கிளையில் தொங்கும் கூண்டு

பறவை பறந்து விட்டால்
கூண்டிற்கும் பொருள் இல்லை.-
கூண்டினைத் தாங்குவதாய் எண்ணியிருக்கும்
இதயத்திற்கும் பொருள் இல்லை.

பற்றற்ற பறவையாய்....
கூண்டு கீழே விழுவதற்குக்
காத்திருக்கும் பறவை காண்.
விழுந்தவுடன் பறப்பதற்குக்
காத்திருக்கும் பறவை காண்..
ஆனாலும்..
பற்றிருக்கும் பறவையாய்...
கூண்டு விழாமலிருக்க
வேண்டிநிற்கும் பறவை காண்.

பற்றுக்கும் பற்றறு நிலைக்கும்
இடையில் மரக்கிளையில்
ஊசலாடும் கூண்டாய்..
பெண்கள் நிலை இதுவென்று
பறைசாற்றும் பறவை காண்..
வாழ்க பெண்மை.

 

Thursday, February 14

நானும் உன் தாய்தான்.

♥♥♥♥♥♥♥♥♥
உன்னை நான்
பத்து மாதம் சுமக்கவில்லை -  ஆனால்
அது ஒன்று மட்டும் தான் செய்யவில்லை.

என் அன்புக்குரியவனிடம்
வேறென்ன சொல்ல??
♥♥♥♥♥♥♥♥♥

Saturday, February 9

இன்றைய சேதி...

கிளம்பும் போதே 'எங்கே செல்கிறாய்?'
என்னும் கேள்வியுடன்..
ஆசான் வள்ளுவனும்
அன்னை தமிழும்

நான் முறைத்தபடியே
'தங்களைக் காணத்தான்' என்றேன்.

அவர்களோ பலமாக நகைத்து விட்டு
"விரைவில் வந்து விடு " என்றனர்.

---------------------------------------
---------------------------------------
சென்ற இடத்தில்
வள்ளுவனையும் காணாது
தமிழன்னையையும் காணாது
வீடு திரும்ப...

வழிமேல் விழிவைத்து
இருவரும் வாசலில் அமர்ந்திருந்தனர்