Thursday, February 28

மரக்கிளையில் தொங்கும் கூண்டு

பறவை பறந்து விட்டால்
கூண்டிற்கும் பொருள் இல்லை.-
கூண்டினைத் தாங்குவதாய் எண்ணியிருக்கும்
இதயத்திற்கும் பொருள் இல்லை.

பற்றற்ற பறவையாய்....
கூண்டு கீழே விழுவதற்குக்
காத்திருக்கும் பறவை காண்.
விழுந்தவுடன் பறப்பதற்குக்
காத்திருக்கும் பறவை காண்..
ஆனாலும்..
பற்றிருக்கும் பறவையாய்...
கூண்டு விழாமலிருக்க
வேண்டிநிற்கும் பறவை காண்.

பற்றுக்கும் பற்றறு நிலைக்கும்
இடையில் மரக்கிளையில்
ஊசலாடும் கூண்டாய்..
பெண்கள் நிலை இதுவென்று
பறைசாற்றும் பறவை காண்..
வாழ்க பெண்மை.

 

No comments:

Post a Comment