Saturday, February 9

இன்றைய சேதி...

கிளம்பும் போதே 'எங்கே செல்கிறாய்?'
என்னும் கேள்வியுடன்..
ஆசான் வள்ளுவனும்
அன்னை தமிழும்

நான் முறைத்தபடியே
'தங்களைக் காணத்தான்' என்றேன்.

அவர்களோ பலமாக நகைத்து விட்டு
"விரைவில் வந்து விடு " என்றனர்.

---------------------------------------
---------------------------------------
சென்ற இடத்தில்
வள்ளுவனையும் காணாது
தமிழன்னையையும் காணாது
வீடு திரும்ப...

வழிமேல் விழிவைத்து
இருவரும் வாசலில் அமர்ந்திருந்தனர்

No comments:

Post a Comment