Thursday, January 31

மனமும் மதமும்


மனம் கொடுத்தான் இறைவன்
மதம் படைத்தான் மனிதன்

மனம் கொடுத்த இறைவன்
அன்பும் சேர்த்தே  கொடுத்தான்.
மதம் படைத்த மனிதன்
அன்பை மனதைவிட்டே நீக்கினான்.

மதமா மனமா எனும்போது
மனதின்வழி சென்றோர்
கடவுளின் குழந்தைகள்.
மதத்தின்வழி சென்றோர்
மனிதனின் கழிவுகள்.

மனம் அழித்து மதம் பேண
சிவனும் சொல்லவில்லை.
எவரும் சொல்லவில்லை.

அன்பே கடவுள்.
அறிவாயா மனமே?
அறிவாயா மதமே?

No comments:

Post a Comment