மரமும் காற்றுமாய்
நானும் அவனும்
.
சிலநேரம் என்னைத்
தலையாட்ட வைக்கிறான்.
சிலநேரம் என்னை
பூஉதிர்க்கச் செய்கிறான்.
சிலநேரம் என்னை
அசைக்க முயல்கிறான்.
சிலநேரம் என்னைச்
சாய்த்தே விடுகிறான்.
அவன் இல்லாது
நான் இல்லை என்பதை
இருவரும் உணர்கிறோம்.
அதனால்தான் இன்னும்
உரசிக் கொண்டும்
உறவு கொண்டும்
இருக்கிறோம்.