Wednesday, July 20

காதலின் போக்கு

மரமும் காற்றுமாய் 

நானும் அவனும் 

.

சிலநேரம் என்னைத்

தலையாட்ட வைக்கிறான்.


சிலநேரம் என்னை

பூஉதிர்க்கச் செய்கிறான்.


சிலநேரம் என்னை 

அசைக்க முயல்கிறான்.


சிலநேரம் என்னைச்

சாய்த்தே விடுகிறான்.


அவன் இல்லாது

நான் இல்லை என்பதை 

இருவரும் உணர்கிறோம்.


அதனால்தான் இன்னும்

உரசிக் கொண்டும்

உறவு கொண்டும்

இருக்கிறோம்.