Tuesday, April 19

என்னுடைய பெரிய அண்ணன்.


ஆறே ஆண்டுகள் மூத்தவன்.
ஆனாலும் அப்பன்போல்
அறிவு தந்தவன்.

வாசித்தலையும் எழுதுதலையும்
மூச்சாகக் கொண்டவன்.
எனக்கும் மூச்சாக்கியவன்.

மனந்தளரும் போதெல்லாம்
என்னை உயரச் செய்யும்
இறைமையோடு உடன்நிற்பாள்.
என் தமிழன்னை.

அத்தமிழை என்னுள்ளும்
என்னை அத்தமிழிலும்
மூழ்கச் செய்தது
அவன்தந்த அறிவு.

இன்னமும் எனக்கு அவன்
அள்ளி அள்ளித் தருவது
அறிவைத்தான்.

ஒருபோதும் பிறர்நோக பேசாதவன்.
ஆனாலும் அவன் சொல்தாண்டி
எவரும் ஏதும் செய்ததில்லை.

ஏனோ பணம்ஈட்ட
விரும்பாதவன்.
அதனாலேயே பலரால்
விரும்பப்படாதவன்.

பணமிருந்தால் தலையில்..
இல்லையெனில் தரையினில்...
என்னும் உலகில்
அவனுடைய கூட்டத்தோடு
தனித்திருப்பவன்.

அண்ணனானால் என்ன
"வாழ்த்த வயதில்லை"
என்று சொல்லி வாழ்த்துவமே!
வாழிய பல்லாண்டு!!!

Monday, April 11

பின்னர் நான் யார்?

கண்கவர் ஆடையும் 

கையில் கோலும்

கொண்டவள்தான் தேவதையெனில்

பின்னர் நான்  யார்?


நைட்டியும் சேலையும்

அணிந்துகொண்டு

அழும் குழந்தையை

அமர்த்துவதில் தொடங்கி

அறுசுவை உணவை

ஆக்குவது வரை

மாயங்கள்பல செய்யும்

நான் யார்?


படிக்கும் குழந்தை முதல்

பேறுகால குழந்தை வரை

அழைக்கும் ஒரே தேவதை

நான் அல்லவா?


என்னை விட்டு இவர்கள்

பாடும் பெண் எவரோ?


ஓஓஓ அதுவும் நான்தான்!!!

குழந்தைகளின் பார்வையில் ....


அம்மா என்னும் தேவதை