கண்கவர் ஆடையும்
கையில் கோலும்
கொண்டவள்தான் தேவதையெனில்
பின்னர் நான் யார்?
நைட்டியும் சேலையும்
அணிந்துகொண்டு
அழும் குழந்தையை
அமர்த்துவதில் தொடங்கி
அறுசுவை உணவை
ஆக்குவது வரை
மாயங்கள்பல செய்யும்
நான் யார்?
படிக்கும் குழந்தை முதல்
பேறுகால குழந்தை வரை
அழைக்கும் ஒரே தேவதை
நான் அல்லவா?
என்னை விட்டு இவர்கள்
பாடும் பெண் எவரோ?
ஓஓஓ அதுவும் நான்தான்!!!
குழந்தைகளின் பார்வையில் ....
அம்மா என்னும் தேவதை
No comments:
Post a Comment