Tuesday, September 22

எழுதப்படா கவிதை

வார்த்தைகள் வந்து விழுவதில்லை
எண்ணத்தைச் சொல்ல;
எண்ணங்கள் தோன்றுவதில்லை
எழுதலாம் எனும்போது;
எண்ணங்களும் வாரத்தைகளும்
கைகோர்க்கும் போது
காலம் கைவசம் இல்லை;
காலம் கனியும் நேரம்
எழுத நினைத்த கவிதையைத் தவிர
ஏதேதோ எழுதிச் செல்கிறேன்..




 

No comments:

Post a Comment