Tuesday, April 2

முக்காலம்..


முன்பு 
அனைவரிடமும்
பாசம் உண்டு பற்று உண்டு.
அன்புண்டு அக்கறையுண்டு .
உரிமையுடன் உதவ மனமும் உண்டு.

அன்புகொண்டு நான் செய்ததை
அனுபவித்த பின் 
'யாரு கேட்டா?'  எனப் பகிர்வோரும்,
என் அன்புணரா மனங்களும்,
வாழ்க வளமுடன்...



இப்போது...
பாசம் இல்லை பற்று இல்லை
பொறாமை இல்லை பகையும் இல்லை.
அன்பு மட்டும் உண்டு.

கேட்பவர்களுக்கு
முடிந்த வரையில்  செய்வதுண்டு.
எவருக்காய்
எம் பண்புகள் மாறாதே.

ஆனால்
அக்கறையின் பொருட்டு
முன்னின்று
ஏதும் கேட்பதும் இல்லை;
ஏதும் பேசுவதும் இல்லை;
ஏதும் செய்வதும் இல்லை;



இனி..
என் கல்வி. தகுதி, செல்வம் பாராது
என்னை எனக்காய் மதிக்கும்
உறவுகளைத் தேடும் பயணத்தில்
சிவன் மாத்திரமே
உறவாய் உள்ளான்.
அவன் மாத்திரமே
நிறைவாயும் உள்ளான்.
ஓம் நமசிவாய...

1 comment:

Unknown said...


Very true lines

Post a Comment