Sunday, November 27

மழையும் நீயே வெயிலும் நீயே - தமிழ்ப்பட பாடல்வரிகள்

படம் : அழகன்

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா

சரணம் – 1
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய் சுடுதே
பார்க்காமல் எனைப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காம தேவனின் யாகசாலையா
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா

சரணம் – 2
கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கருநீளக் கண்கள் இரண்டும் பவழம் பவழம்
எரியும் விரதம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யார் அறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யார் அறிவார்?
முதலா முடிவா இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா ஆஆஆ உனைத்தான்….
இங்கு வாழும் மானிட காதல் என்பதா

No comments:

Post a Comment