Saturday, December 30

பாடல்  - காந்திமதி அம்மன் மேல்


இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன்
காத்தருள்வாயே..


சரணம் 1
பதம் வைத்தாடும் பஞ்சலோக நாயகி நீ..
நிதம் உனைப்பாட அருள்தரும் சக்தீ நீ
பூத்திடும் பூவெல்லாம் உன் திருவடிதனில்
பாடிடும் பாவெல்லாம் உன் அகக்கோயிலில் -நான்
பாடிடும் பாவெல்லாம் உன் அகக்கோயிலில்

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன்
காத்தருள்வாயே..

சரணம் 2
வில்லேந்தும் திருக்கரம் எனையேந்தும் பொற்கரம்
சொல்வண்ணம் நிறையுடை சொக்கனின்
அகமுடை
ஆயிரங் கண்ணுடை  அன்னையின்
அருந்துணை
பா ஆயிரம் பாடிடும் அடியவர் வழித்துணை

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன்
காத்தருள்வாயே

No comments:

Post a Comment