Wednesday, October 17

#Me too - #என்னையும் தான்

இரு வார்த்தை தான் - ஆனால்
இந்தியாவையே அசைத்தபடி!!
சில ஆண்களின் சபலம்
அவர் புகழை
சிலுவையில் அறைந்தபடி!!
இருக்கட்டும்....

பெண்ணொருவர் சொன்னபடி ..
'மன உறுதி பெண்களிடம்
கண்ணீர்க் கதைகள் இல்லை.
மாறாய் அவனை(ரை)
அடித்து விரட்டிய
குறுஞ்செய்தி மாத்திரமே...'

எனக்கும் இதுவே கருத்து.
தொட்ட ஆணின் சட்டை இறுக்கும்
உறுதியான கைகள் இல்லைதான்
தொட்ட ஆண் தொட முடியா
உயரத்தில் உள்ளபோது..
அவன்(ர்) உயரத்திற்கு
ஏறிய பின் சட்டை பிடிக்கலாம்
என்பது முறைமையோ?

பெண்ணைச் சிறுமைப்படுத்தும்
ஆண்கள் எவரும் முத்துக்கள் அல்லர்.
அவர்புகழ்பாட வரவில்லை
எவரும் இங்கே..

கரடிகளைக் கண்டதும்
சிவபூசையையே
நிறுத்தும் போது,

புலிகளைக் கை காட்ட மட்டும்
காலநேரம் வேண்டுமா?

ஒவ்வோர் துறையாய்
உயர ஏறியபின்
கைகாட்டுதல் முறையா?

பலியாடாய் இருந்தும்
பழிவாங்கப்படுதல் பெண் மாத்திரமே...
முதல்முறை வாய்மூடினால்
முப்பது முறையும் வாய்மூட வேண்டுமே?
இனியாவது...

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்."

வள்ளுவன் சொன்னதுதான்.
செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாதவைகளால் நாமும் கெடுவோம்..
நம் புகழும் கெடும்..
 

No comments:

Post a Comment