Monday, September 24

புறம் வேண்டாம்

'சும்மா இரு' என்றது மனம்

'சும்மாயிருத்தலின்
தொலைக்காட்சி காணலாம்'
என்றது அறிவு.

தொலைக்காட்சியில் பெரிய முதலாளி இல்லம்  காணின்
இணையம் மேல் என்றது.

இணையத்தின் கைகளிடம்
கைதியாதலின் 
தோழியரிடம் கதைக்கலாம் என்றது.

முடித்தவுடன் தோன்றியது...
புறம் பேசுதலின்
சும்மா இருந்திருக்கலாம் என்று.. .

இதைத்தான் நான் முதலிலேயே சொன்னேன்;
சும்மா இரு என்றது மனம் ..

No comments:

Post a Comment