Sunday, March 22

எண்ணங்கள்

பகலில் தூங்கா
துறுதுறு குழந்தைகள் 
பகல்தூக்கம் கொள்ளும் போதும்
ஆடி ஓடிக் களைத்து
இயல்பாய் தும்மும் போதும்
பதறும் பெற்றோரின்
உள்ளம் அறிவீரா?

உயிரினங்களை நிம்மதியாக
வாழ விடாது 
எத்தனை கிருமிகள்
வேண்டுமானாலும் கண்டுபிடியுங்கள்.

மனிதத்தை மறக்கடிக்க
எத்தனை வழிமுறைகள்
வேண்டுமானாலும் கண்டுபிடியுங்கள்..

அனைத்தையும் மனிதனின்
எதிர்ப்பாற்றல் எதிர்த்து நிற்கும்..

இல்லையெனில் என்றோ
அதிகாரம் வென்றிருக்குமே
இன்றுவரை வரலாற்றில்
மனிதன்தானே வென்றிருக்கிறான்.

*"அரசியல் பிழைத்தோருக்கு
*அறமே கூற்றாகும்."*
அறியாது செய்தவனுக்கு இக்கதி..
அறிந்து செய்தவர் கதியறிந்தும்
தொடர்ந்து செய்யும்
நீவிரும் மனிதன்தானே!

இறைமை தந்த அறிவை
அப்படியே வைத்திருக்கும்
அறிவிலி பரவாயில்லை..
இப்படி பயன்படுத்தி
மக்களைக் கொல்லும்
அறிவாளிகளை விட..

பூவுலகில் வாழும்
நல்உள்ளங்களைப் பொருட்டே
இயற்கை உம்மை மன்னிக்கிறது..
மறந்து விடாதீர்...

No comments:

Post a Comment