Tuesday, March 24

அம்மாவாகிய நான்...

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்..."
மறைந்து கொண்டது.

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க..."
தலையிலடித்துக் கொண்டது.

"இனிய உளவாக இன்னாத  கூறல்..."
வாய் மூடிக் கொண்டது.

"இன்னா செய்தாரை ஒறுத்தல்..."
தன்னையே ஒறுத்துக் கொண்டது.

#குழந்தைகளிடம் கத்திய கத்தலில் கற்ற
குறள்கள் எல்லாம் தெறித்தோடின...

ஆனால் எப்போதும் போல்
"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி.." மட்டும்
வாரியணைத்துக் கொண்டது.

கற்கத் தொடங்கினேன் மீண்டும்
"கடவுள் வாழ்த்திலிருந்து..."

No comments:

Post a Comment