Thursday, August 4

சதுரங்கம்

எண்ணம் #1

அரசனுக்கு அதிகாரம் இல்லை என்பர்.

அரசிக்கு நிகர் அவளே என்பர்.

அவர்கள் அறிவது இல்லை ஒருபோதும்..

அரசி வெட்டுண்டாலும்

ஆட்டம் தொடரும்.

அரசன் சூழப்பட்டாலே ஆட்டம் முடிந்துவிடும் என்பதை.


எண்ணம் #2

களம் நின்று விளையாட

கணவனை விடுவது இல்லை.

களம் விட்டுச் சென்றாலும் 

மீண்டு வருவாள் அவன்தன்னைக் காத்திடவே!!!


எண்ணம் #3

வெட்டுண்டு களம் நீங்கினும்

மீண்டு வருவாள்

தலைவன் உயிர்காக்க...

செங்களத்தின் அரசி.


No comments:

Post a Comment