எண்ணம் #1
அரசனுக்கு அதிகாரம் இல்லை என்பர்.
அரசிக்கு நிகர் அவளே என்பர்.
அவர்கள் அறிவது இல்லை ஒருபோதும்..
அரசி வெட்டுண்டாலும்
ஆட்டம் தொடரும்.
அரசன் சூழப்பட்டாலே ஆட்டம் முடிந்துவிடும் என்பதை.
எண்ணம் #2
களம் நின்று விளையாட
கணவனை விடுவது இல்லை.
களம் விட்டுச் சென்றாலும்
மீண்டு வருவாள் அவன்தன்னைக் காத்திடவே!!!
எண்ணம் #3
வெட்டுண்டு களம் நீங்கினும்
மீண்டு வருவாள்
தலைவன் உயிர்காக்க...
செங்களத்தின் அரசி.
No comments:
Post a Comment