Thursday, August 25

ஓடி ஓடி....

மூச்சுமுட்ட ஓடி 

முதலில் வந்தாச்சு.

கரவொலி கிறங்க வைக்க..

வெற்றிப்பெருமிதம் 

மனதில் பொங்க

சுற்றிமுற்றி பார்த்தேன்..

உலகே என்கையில் 

என்பதாய் உணர்ந்தேன்...


இளைப்பாற நேரமின்றி

கண்மூடித் திறப்பதற்குள்

மீண்டும் ஓட்டம் ஆரம்பம்.

ஓடத் தொடங்கினேன். 

முதலில் வருதலே போதையாய்...

முதலில் வருதலே தவமாய்..

ஓட்டத்திற்கு மேல் ஓட்டம்...


ஓடி ஓடிக் களைத்து

ஒடிந்து கீழே விழுந்தேன்.

நின்று நிதானமாய்

சுற்றிமுற்றி பார்க்கிறேன்..

உலகு என் கையிலிருந்து

நழுவி எங்கோ போயிற்று..

உணர்வற்று இருந்தேன்.

இப்போதும் கரவொலி .

எனக்கல்ல அவ்வொலி.


No comments:

Post a Comment