Wednesday, January 20

புதுமைப் பெண்ணின் பேனாவும் புதுக்கவிதையும்.....


எழுதலாம் என்ற எண்ணமே இல்லாமல்
எடுக்கும் பேனாவும் டைரியும்
என்னைப் பார்த்து

என்ன எழுதப் போகிறாய்?
என்ன வேண்டுமென்றாலும் எழுது...
எண்ணத்தை மட்டும் எழுதாதே...
எண்ணிய எண்ணங்கள் எல்லாம்
எழுத நீ ஒண்ணும்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணல்ல வெறும்
பாத்திரம் துலக்கப் பிறந்தவள்தான்..

வேண்டுமானால்
பாத்திரம் துலக்குவதிலும்
துணி துவைப்பதிலும்
பண்ணிக்கொள் புதுமை..
இன்னும் வேண்டுமானால்
பிள்ளை வளர்ப்பதையும்
பாயாசம் வைப்பதையும்
சேர்த்துக்கொள்..
மீறி ஏதும்
புதுமைகள் செய்துவிடாதே....

இனி எழுது உன்
புதுக்கவிதையை
கவனமாக!!
என எச்சரித்தது..

No comments:

Post a Comment