Monday, December 14

மாறுவோம் இனி...




பாட்டியா அவள்?
மருந்துகள் பல
தன்னில் கொண்ட
பொட்டி அவள்.

சுக்கு மிளகு திப்பிலி என
முக்கடுகம் கொண்டவள்.
தினை வரகு சாமை என
மூவகை அரிசி கண்டவள்

சீரகமும் மல்லியும் தட்டி
அரைத்து மிளகு இடித்து
வைத்த இரசம் வீடெங்கும்
கொதித்து மணம் வீசும்.

அடித்த கோழிக்கும்
வெட்டிய ஆட்டுக்கும் அவள்
பூசிய மஞ்சள் நாம்
பூசியதில்லை.

நாம் செய்ததெல்லாம்
நம்முடன் சேர்த்து
அவளையும் பாஸ்தா
உண்ணச் செய்ததுதான்.

மருந்து மருந்து என
விருந்துதானே உண்கிறோம்.
இருந்தும் பன்னீரும் நானும்
பருகரும் பீசாவும் தேவையாய் போனது.

விருந்து போல மருந்துண்ணாது
மருந்து போல உணவுண்டு
மகிழ்வாய் வாழும் வாழ்விற்கு
மாறுவோம் மெல்ல மாறுவோம்

No comments:

Post a Comment