Thursday, December 24

வள்ளுவருக்கு எழுதுகிறேன்...


 ஆசானே....

உயர்ந்த இலக்குகளைக்

குறிவைக்கச் சொன்னீர்.


கலியுகம் அல்லவா?

இலக்கிற்கு 

குறி வைக்காது...

இலக்கு கொண்டவர்களைக்

குறி வைக்கிறோம்.


கவிழ்த்து விடத் துடிக்கிறோம்.

மாட்டிவிட அலைகிறோம்.


உள்ளத்தில் 

உயர்வு கொள்ள

உன்னையும் படிக்கிறோம்.


தனித்திருக்கும் போது 

மனம் நிறைய மாசும்

சொல் நிறைய சினமும்

செயல் நிறைய சீர்கேடும்.


கூடியிருக்கும் போதோ

அத்தனையும் அடக்கும் 

வல்லமை பெற்றவராய்...


இனியாவது இலக்குகளைக்

குறி வைக்க

உள்ளுவோம்.

உயர்வு கொள்வோம்.


No comments:

Post a Comment