Tuesday, December 8

தோழியர்களுக்கு...




கவர்ந்தது எப்போதும் கமல்தான் என்பாய்
கவர்ந்தது எப்போதும் கலைஞர் என்பேன்
கிரிக்கெட் பார்த்து கட்டுரை வரைவாய்
பிரித்து மேய்வேன் நான்.

மனத்தில் பதிய மனனம் செய்ய
மணலில் நடந்து மறைவிடம்  தேடி
மறைந்து அமர்ந்து மாங்காய் பறித்து
நிறைந்து விடுமே நாள்.

படிக்கும் நேரம் பறவை யானோம்
நடிக்கும் நேரம் நடிகர் ஆனோம்
ஆடும் நேரம் ஆனந்தம் கொண்டோம்
பாடும் நேரமோ குயில்.

தங்கிய விடுதியில் தாயை எண்ணி
பொங்கிய கண்ணீர் பொசுக்கென மறைய
என்றும் என்னுடன் எங்கும் இருப்பாய்
இன்றும் இருக்கிறாய் எங்கோ.

இடைவெளி வந்தும் இடைஞ்சல் வந்தும்
இடங்கள் பிரிந்து இடையூறு வந்தும்
இணையம் சேர்க்கும் இடைவெளி பூசும்
இணைந்து கொள்வோம் நாம்

No comments:

Post a Comment