Thursday, February 4

புத்தரைப்போல அமரவே விருப்பம்


 உம்மைப்போல அமரவே விருப்பம்*


யாருமற்ற தனிமையில்
ஏதுமற்ற சூழலில்
எதுபற்றியும் சிந்திக்காது
அமைதியாய் அமர வேண்டும்.

மகள் சகோதரி மனைவி
அம்மா அத்தை அண்ணி
என பொறுப்புகள் ஏதுமின்றி
அலைந்து திரியும்
உயிர்களில் நானும் ஒருத்தியாய்
திரியவே விருப்பம்.

உடலால் பயணிக்காது
சிந்தனையால் பயணித்து
கண்மூடி அமர்ந்து
எத்தனை தொலைவு சென்றாலும்
"அம்மா இன்னைக்கு பிரியாணி" 
என்னும் குரல் என்னை
இங்கு இழுத்து வந்து விடுகிறது.

என்ன செய்வது?

No comments:

Post a Comment