Saturday, February 20

தனிமை


 நிலவும் கதிரும் மாறிமாறி

காற்றும் நீரும் சுற்றிசுற்றி
தனியனாக இருப்பினும்
தனிமையில் இல்லை நான்.

என் தனிமை போக்க
வரவேண்டாம் நண்பா .
உன் தனிமை போக்க
வா என்னிடம்..

இருந்து கொள் என்மேல்.
விரும்பினால் நீபேசு..
இல்லையெனில் நான் உரைப்பேன்..
ஈராயிரம் கதை.

இங்கு வந்து சென்றவர்
என்னிடம் பகிர்ந்த கதை.
ஆனாலும் நம்பு
பகிர மாட்டேன் எவரிடமும்..

*நீ பகிர்ந்த உன்கதையை*

No comments:

Post a Comment