Friday, February 12

நானும் ராதையும்


 நானும் ராதையும்

காதல் தழுவலில்.
இமைகள் மூடியிருக்க
இன்பத் தழுவலில்.

கிருஷ்ணா கிருஷ்ணா எனும்
கிறங்கும் ஒரு குரல் - அது
உருக்கமாய் காதில் விழுந்த
ருக்மணியின் குரல்..

கைகள் எடுத்தாலோ
கண்கள் திறந்தாலோ
கண்மணியிவள் இன்பங்கெடும்

மாயவன் நான் அல்லவா
மாயங்களும் செய்பவன் அல்லவா
இன்னோர் உருவம் எடுத்தேன்
ருக்மணியின் கணவனாக.

அவள்முன் சென்று
ஆயிழையைத் தழுவும்முன்
பாடி அழைத்தாள் பாமா.
பாவமாய் நிற்கிறேன் நான்.

என் செய்வது?
அன்பு செய்யும் மனம் இருப்பின்
அன்பின் தொல்லைகளும் நேரும்தானே.

No comments:

Post a Comment