Saturday, March 6

இதயமும் மூளையும், மனமும் அறிவும்



 

 இதயமும் மூளையும்

உடல் உறுப்புகள்.
மனமும் அறிவும்
உடல் உறுப்புகளா?

மனம் என்றால் இதயம் என்றும்
அறிவு என்றால் மூளை என்றும்
கற்பிதம் செய்து கொண்டீர்
கற்றறிந்த மானிடரே..

இருவரில் ஒருவர்
செயலிழப்பின
நீங்கள் நீங்களாக
இருத்தல் இயலாது.

மனதுக்கும் அறிவுக்கும்
மாறுபாடு வந்து வந்து போகும்.
மனதுக்கும் அறிவுக்கும்
மாறுபாடு வந்து வந்து போகும்.

மனம் மாசற இருப்பின்
அறிவு அமைதியாய் இருக்கும்.
அறிவு அமைதியாய் இருப்பின்
மனம் மொழியற்று இருக்கும்.

அகந்தையில் அறிவு துள்ள
மனம் புலம்பித் தள்ளும்.
புலன்போன போக்கில் மனம் மயங்க
அறிவு ஆர்ப்பாட்டம் செய்யும்.

மனம் போன போக்கில்
வாழ்வார் சித்தர்.
அறிவின்படி மட்டும்
வாழ்வார் அறிவுடையோர்.

இரண்டுடனும் வாழ்வார்
இடைப்பட்ட மனிதர்.
இருந்தும் இரண்டும்
இணையக் காணார்.

இரண்டும் இணைவது
இறையருள் என்பார்.
இறையருள் உணர்ந்தார்.
இணையக் காண்பார்.

அறிவற்று வாழ்வாரை
ஏசும் உலகம்
மனமற்று வாழ்வாரை
மதிப்பதுகூட இல்லை.

முட்டாளாய் என்னை
ஏசினாலும் ஏற்பேன்.
கல்மனம் என்றாலோ
கரைந்தே விடுவேன் காற்றில் நானே..

No comments:

Post a Comment