Friday, March 12

நூல்கள்


பக்கமாய் பக்கமாய் நூற்று

புத்தகமாய் என்னில் வருவாய்.

கண்மூடி கண்ணீர் விட்டபடி ...
விழிகள் திறந்து வியந்துபடி...
வாய்விட்டுச் சிரித்து வாசித்தபடி...
உதடுமடித்து வெட்கத்துடன் புன்னகைத்தபடி..

இல்லாத மன்னன்மேல் பகைகொண்டபடி...
மன்னனின் தோழனிடம் நட்புகொண்டபடி...
இன்னும் வந்தியத்தேவனைத் தேடியபடி...

பாலகுமாரன் நாயகனிடம்
மனந்தொலைத்தபடி...
அனுராதா நாயகியிடம்
அழுத்தமாய் பேசியபடி...

இராஜேஷ்குமார் கதைகளில் இரத்தம் துடைத்தபடி...
கணேஷ்-வசந்தை உண்மை என்று நம்பியபடி...

லண்டன் தெருக்களில்
ஹார்பாட்டரை நினைத்தபடி...
சேட்டன்பகத் கதைகளை
சீச்சீ சொன்னபடி...

காந்தியடிகளின் சுயசரிதையில் கரைந்தபடி...
கலாமின் அக்கினிச்சிறகுகளில் தீப்பொறியாய் திரிந்தபடி...

கட்டுரைப்புத்தகங்களில்
உண்மைகளின் சூட்டினை உணர்ந்தபடி....

திருக்குறள்  கற்று
அறம் அறம் என அனத்தியபடி...
சங்கநூல் கற்றும் உலகளவு உள்ளதே என்று புலம்பியபடி...

எப்போதும் ஏதேனும் வாசிப்பா என
வீட்டில் திட்டுக்கள் வாங்கியபடி....

இன்னமும் நான் வாழ்வது
உன்னினம் மொத்தமும்
என்னில் புதைக்கவே..
நீயில்லா உலகெனில்
உயிர்ப்பில்லா உடல்நான்..

No comments:

Post a Comment