Monday, March 8

மகளிர் நாள் வாழ்த்துகள்

 பெண் இல்லாத ஊரிலே

கொடிதான் பூ பூப்பதில்லை.
அவ்வளவுதான் உலகம்.
அவள்தான் உலகம்.

ஆணுக்குக் கீழ்தான்
என்றடக்கி வைப்பினும்
அமைதியாய் இருப்பவள்
அடங்கியே இருப்பவள்

நிமிர்ந்து நின்று அவள்
நேர்கொண்ட பார்வை பார்ப்பின்
திமிரானவள் என
திட்டுவாங்கித் திரிபவள்.

பொறியியல் என்ன
மருத்துவம் என்ன
கணிப்பொறி என்ன
கணிதவியல் என்ன

ஆய்ந்தறிந்து கற்றாலும்
அறிவுரை கூறவும்
கருத்தேதும் சொல்லவும்
உரிமையொன்று இல்லாதவள்.

உற்ற தோழி துன்புறினும்
உதவிட இயலாது
உடனிருப்போர் உத்தரவை
உற்றுப் பார்த்தபடி நிற்பவள்.

அழுகையில் சிரிக்கவும்
சிரிக்கையில் சினக்கவும்
சினக்கையில் சிணுங்கவும்
சிணுங்கையில் அழுகவும்

எல்லாம் தெரிந்தும் ஏதுமறியாதவள்
எல்லாம் இருந்தும் ஏதுமற்றவள்.
உணர்ச்சிகளில் கூட
முரண்ப்ட்டவளாய்..

Big boss பாலா போல
வைச்ச்ங்கோங்க..
*உலக மகளிர் நாள் வாழ்த்துகள்*.

No comments:

Post a Comment