Thursday, March 25

நான் என்னும் நான்.*



இன்று கிடைப்பன கொண்டு
இனிதே வாழ்பவள் இவள்.

நாளைக்காய் வாழாது
நாளும் வாழ்பவள் இவள்.

கூட்டுப்புழு வாழ்க்கை
கோடி கொடுப்பினும்
மீண்டு வாரா..என
மூடிக் கிடப்பவள் இவள்.

வண்ணத்துப்பூச்சி வாழ்வு
வரும்போது வாழ்வோம் என
வாழ்ந்து கடப்பவள் இவள்.

என்ன எழுத என
எண்ணியபடி
நேற்றைத் தொலைத்தவள் இவள்.

இன்றுதித்த எண்ணத்தை
இன்றே
எழுதி பகிர்ந்தனள் இவள்.

No comments:

Post a Comment