Friday, April 9

வண்ணமுகம்...


 பாதிமுகம் வண்ணமாய் 

மீதிமுகம் உண்மையாய்

பாதிமுகம் காட்டாது என்னை.

கண்மூடி இருப்பவளிடம் காதல் கேட்கிறாய் .
கண்திறப்பின் உண்மை சுடுமே!

வண்ணக்கோலம் கொண்டு
முகம் மறைப்பேன்..
எதைக் கொண்டு என் எண்ணம் மறைப்பேன்?

எனக்கான காதல் நீதானா?
இன்னும் புரியாமல்தான்
கண்மூடி வண்ணம் மூடி....

காத்திருக்கிறேன்
உன் தொடுகை
எனக்குணர்த்தும் என..

No comments:

Post a Comment