Thursday, May 6

தோழிவிடு தூது



ஒற்றைக்கால் கொக்கின் தவம
ஒண்டொடி நழுவும் முன்கை நங்கை
ஒண்மையிழந்த கண்கள் பரவும் பசலை
ஒறுத்தது போதும் தலைவா வாஅவள்முன்!

குளமும் தென்றலும் அவள்துயர் ஆற்றா
குலமகள் கவலை குவளை ஆற்றுமோ
களத்தில் நின்கதி இவள்மனம் அறியுமோ
வெள்ளைப்புறா ஒன்றை விரைந்து அனுப்பிவை!

தோழியர்  எம்மிடமும் ஒன்றும் சொல்வதில்லை
நாழிகை கழிந்தும் நகராது நிற்கிறாள்
பாவியவள் பண்ணிய பாவமென்ன பகர்வாய்
தாவிவந்தே அவள்தாகம் தணித்திடுவாய்  இன்றே!

அன்னையவள் சேதி அறிந்திடும் முன்னே
கன்னியவள் நிலை குலைந்திடும் முன்னே
மீன்கிட்டி வெண்கொக்கு பறந்திடும் முன்னே
வான்வழியாய் விரைந்து வண்ணமாய் வந்திடு!

No comments:

Post a Comment