Thursday, May 13

படமும் பாடமும்

.

செங்கல் முட்டுக் கொடுக்கும் கருங்காலி கட்டிலும் 

 சேவல் கொத்தித் திரியும் செம்மைத் தரையும் 

 இருவர் படுத்திடும் மெத்தையில் உறங்கிடும் எண்மரும் 

 இன்னும் இருவருமாய் உருளும் பூனையும் நாயும் 

 கருமையாய் இராது பழுப்பாய் பொழிந்திடும் மேகமும்

 கூரைபோல இருக்கும் மழைநீர் ஒழுகும் கூரையும் 

 குடைக்குள் ஒழுகாது வெளியே ஒழுகிடும் தண்ணீரும் 

 வேறுவேறு கனவு என்றாலும் புன்னகைக்கும் இதழ்களும்

 இதுதான் வாழ்வென்று சொல்லாமல் சொல்கின்றன.

 அன்புள்ள அனைவரையும் புன்னகைக்க வைக்கின்றன.



No comments:

Post a Comment