Monday, February 21

மனம் போனபடி...

 மனம் தான் குழப்புகிறது. 

தெளிவும் படுத்துகிறது. 

கோபப்படச் செய்கிறது. 

ஆறுதலும் தருகிறது. 


 புலம்ப வைக்கிறது.

 மகிழவும் வைக்கிறது. 

செருக்கு கொள்கிறது. 

கூனி குறுகவும் வைக்கிறது.


 கூத்தும் கும்மாளமுமாய்

 குத்தாட்டம் போட வைக்கிறது.

 எதுவும் வேண்டாம் 

என தள்ளியும் விடுகிறது.


 அறிவின் பாலும் செல்கிறது.

விருப்பின் பின்னும் விரைகிறது.

 

 இன்றுவரை 

நல்லதோ கெட்டதோ 

 மனம் போன படியே போகிறேன்.


 குட்டும் திட்டும் விழுந்தால் கூட 

அப்படியே தான் இருக்கிறேன்.

 பாராட்டு வரும்போதும் 

அப்படியே.


.மனம்படி வாழ்தலில், 

நல்லபெயரை விட 

 கெட்டபெயர் எளிதில் வரும். 

ஆனால் மனம்

இன்பமாக இருக்கும். 


 நம்பிக்கை இல்லையா? 

வாழ்ந்து பாருங்களேன். 

No comments:

Post a Comment