Monday, February 4

மஸ்கட் தமிழ்ச்சங்கம்

மஸ்கட் தமிழ்ச்சங்கம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெறும்.

இந்த வருடம் கடந்த வார வெள்ளிக்கிழமை(Feb 1) மிகக் கொண்டாட்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் கலந்து கொண்டன.

Muscat Cicilization Club என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகள், தம்பதியர், வயதானவர்கள் என்று அனைவருக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டது, மெகா போட்டியாக ‘தம்போலோ’ நடத்தப்பட்டது, பரிசு, ‘ Air Arabia Return ticket to Chennai. 2 பேருக்குக் கிடைத்தது.

சென்ற வருடம் போட்டிகள் அல்லாமல் பம்பரம்விடுதல், ஏழுகல், கில்லி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்த வருடமும் அதேபோல் கும்மி, பச்சைக்குதிரை போன்றவை நடத்தப்பட்டன.

அது மட்டுமல்லாமல் மதிய உணவு, மாலை தேநீருடன் சிற்றுண்டி வழங்கப்பட்டது, விடைபெறும் சமயம் Gift hampers ம் அளிக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, அன்றைய குளிரும், காற்றும். விர்,விர் என்று கடல்காற்று சுழன்றதில் மக்கள் நடுங்கி விட்டனர், மஸ்கட்டில் கடல் எனக்குத் தெரிந்து ஒரு பெரிய குளம் போல இருக்கும்.(அளவில் அல்ல!) அலையே இல்லாமல், சப்தமுமில்லாமல் அமைதியாக இருக்கும், ஆனால் அன்று கடற்கரையில் நின்ற போது திருச்செந்தூரில் நிற்பது போல் அலையும், சப்தமும் ஆகா!

வந்திருந்த அத்தனை பேரும் சொன்னது, “இத்தனை வருஷமா மஸ்கட்டில் இருக்கிறோம், இந்த மாதிரி காற்று பார்த்ததே இல்லைப்பா,”

(Gonu - Cyclone க்கு அப்புறம் மஸ்கட் பருவ நிலையில் நிறைய மாற்றங்கள்!)


உங்கள் பார்வைக்கு...

















No comments:

Post a Comment