Thursday, September 10

எலிக்காதல்


 மனிதனுக்கு மண்டியிட்டே பழக்கம்.

எலிகளுக்கு இல்லை அவ்வழக்கம்.

 

பெற்றவள் பிடித்திழுக்கவில்லை.

மற்றவள் இழுக்கிறாள்.

 

மாதவிக்கு மலர் கொடுக்க

விடுவதற்கு

கண்ணகியா  நானென்றவாறு

கைபிடித்தே இழுக்கிறாள்.

 

இதயம் கொடுக்கும்போது

சும்மா இருந்துவிட்டு

மலர் கொடுக்கும் போது

மறித்தால் என்செய்வது?

 

தொங்கிபடியே கொடுக்கும் வண்ணமலர்

உதிர்வதற்குள்

பெற்றுக் கொள்ளடி..

No comments:

Post a Comment