Monday, September 21

என் விருப்பமாய் நான்


 கல்லாய் இருத்தலும்

பாறையாய் இருத்தலும்

சிலையாய் மாறுதலும்

சிற்பமாய் உருப்பெறுதலும்

உன் விருப்பமன்றோ?

பார்ப்பவரின் கண்ணில்தான்

நீ கல்

நீ பாறை

நீ சிலை

நீ சிற்பம் எல்லாம்.

உன்னிலிருக்கும் உனக்கு

மட்டும் தெரியும்

நீ யாரென

நீ மதி உன்னை.

நீ வியந்துபார் உன்னை

 

அடுத்தவர் சொல்லுக்கு

உளி எடுக்காதே

உன் நிறைவுக்கு உளியெடு.

 

பிறருக்காய் உளியெடுத்தால்

பிறர் விரும்பும் சிலையாவோம்

நமக்காய் உளியெடுத்தால்

நாம் விரும்பும் சிலையாவோம்.

No comments:

Post a Comment