Thursday, September 17

புறாக்களே புறாக்களே


புறாக்களே புறாக்களே

எங்கே போறீங்க?

பறந்துகூட போகாம எங்கே போறீங்க?

நடந்துநடந்து போனாக்கா அடைய முடியுமா?

நடக்கஇது நேரமில்லை பறந்து செல்லுங்க!!

 

நிழலுபார்க்க உயரமிறங்கி இங்க வந்தீங்க

நிழலுபார்த்த மகிழ்ச்சியில

எங்கே போவீங்க?

எனக்குமட்டும் எங்கேன்னு சொல்லிச் செல்லுங்க

மெனக்கெட்டு காத்திருக்கேன் பதில் சொல்லுங்க

 

மருண்ட கண்ணு மானுக் குன்னா

உருண்ட கண்ணு உங்க ளுக்கு

கரண்டு கம்பி காக்கா குன்னா

இருண்ட மாடம் உங்க ளுக்கு

 

பார்த்து பார்த்து வியந்துடுவோம்

பார்வை பார்த்து மயங்கிடுவோம்

கல்லெ டுத்து வீசிடுவோம்

கவிதை கூட எழுதிடுவோம்.

 

மானங்கெட்ட மனுசங்கதான்

தோணுறதை செஞ்சிடுவோம்

கொரானாக்கு நல்லதுன்னு

குறுஞ்செய்தி வந்த்துன்னா

புறாக்கறியும் தின்னுடுவோம்.

மானங்கெட்ட மனுசங்கதான்

தோணுறதை செஞ்சிடுவோம்..

No comments:

Post a Comment