Monday, November 2

பரிணாம‍ம்



குரங்காய் தோன்றி

 குரங்காய் வளர்ந்து

மனிதனாய் மாற
யுகங்கள் ஆனது.

மனிதனிலிருந்து மீண்டும்
குரங்காய் மாற
கொரானா காலமே
மிகுதியாய் போனது.

ஆயுதங்கள் புதிது புதிதாய்
ஆக்கத்திற்காய் கண்டான்.
குரங்கிலிருந்து மனிதனாய்
பரிணாமம் பெற்றான்.

ஆயுதங்கள் புதிது புதிதாய்
அழிவிற்காய் கண்டான்.
விலங்கை விட இழிவாய்
உருமாறி நின்றான்.

குரங்கின் இயல்புமின்றி
மனிதனின் இயல்புமின்றி
உடலும் மனமும் மாறி மாறி
அங்குமிங்கும் தாவித்தாவி..

இன்னும் என்னென்ன
செய்வானோ
அத்தனையும்
தன்னையழித்திட
என்பதறியாதவனாய்..

No comments:

Post a Comment