Thursday, November 19

மனம் என்னும் மந்திர ஆற்றல்




இமயமலையின் இயற்கையா
பொதிகையின் பொலிவா
ஆழ்கடல் அழகா
எரிமலை சீற்றமா
நினைத்த மாத்திரத்தில்
நினைத்த இடம் காட்டும்
மனம் என்னும் மந்திர ஆற்றல்..

ஐந்தாம் வகுப்பில் வாங்கிய அடிகள்.
பத்தாம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண்.
கல்லூரிக் கால கலகல வாழ்க்கை.
திருமணத்தன்று செய்த ஒப்பனை.
நினைத்த மாத்திரத்தில்
நினைத்த கணம் காட்டும்
மனம் என்னும் மந்திர ஆற்றல்..

இன்பத்துள் இன்பம் விழையாமல்
துன்பத்துள் துன்பம் அடையாமல்
இக்கணத்தில் வாழும் நெறியினை மட்டும்
இன்னமும் தாராது
வேடிக்கை காட்டும்
மனம் என்னும் மந்திர ஆற்றல்

No comments:

Post a Comment