Monday, November 23

எறும்புகளை ஏனோ எனக்கு பிடிப்பதில்லை


யானை சுமக்கும் சுமை

எறும்பு சுமப்பதில்லை;
யானை தன்னில் பாதி
எடை கூட சுமக்காது;
எறும்போ தன்னின்
இருமடங்கு சுமக்கும்;
ஆனாலும்
எறும்புகளை ஏனோ
எனக்கு பிடிப்பதில்லை...

படுத்து உறங்கும்
விலங்குகளுக்கு இடையே
குதிரைகள் படுத்து
தூங்குவது இல்லையாம்,
நின்றபடியே தானாம்;
எறும்புகளோ ஒருகணம்
நிற்பது கூட இல்லை.
ஆனாலும்
எறும்புகளை ஏனோ
எனக்கு பிடிப்பதில்லை...

காரணமதை சிந்தித்தேன்
ஒரே ஒரு காரணம்தான்
தன்வேலை தன்முயற்சி
என்றிருக்கும் எறும்புகள்தான்
தன்வழியில் குறுக்கிடும்
தன்மையான மனிதரோ
பொன்போல் பட்டுபோல்
கன்னங்கொண்ட குழந்தையோ
கண்ணோட்டம் காணாது
கடித்து வைக்கும் எறும்புகள்

எவரும் தெரிந்து
உன்னை மிதிப்பதில்லை.
எவரும் தெரிந்து
உன்வழி வந்ததில்லை
இருந்தும் கடித்து வைக்கிறாய்
இறந்தும் அரிக்க வைக்கிறாய்.
இதனாலே எனக்கேனோ
எறும்புகளை பிடிப்பதில்லை.

இப்படிக்கு
*எறும்பிடம் கடிபட்டு*
*அரித்துக் கொண்டிருப்போர் சங்கம்.*
😁😁😁

(சும்மா நகைச்சுவைக்கு த்தான்..
எந்த எறும்பிடமும் சொல்லிவிடாதீர்கள்..😟😟😟)

No comments:

Post a Comment