Monday, November 16

நத்தைகளின் காதல்


 சிலந்திவலையை

வெண்கொற்றமாய் பிடித்தவனே!

என் மனதும்
உன் மனதும் பொருந்தியென்ன?
ஓடுகள் பொருந்தவில்லையே!

செம்புலப்பெயல்நீர் போல கலந்தென்ன?
என்னை விட
அடர்வண்ணமாகி விட்டாயே!

எந்தையும் நுந்தையும்
ஒத்துக் கொள்வரோ?

ஊர்ந்துபோய்த் திருமணம்??
வேண்டவே வேண்டாம்..

காத்திருப்போம்
காலம் கனியும்வரை.

பொறுத்திருப்போம்
பெற்றோர்மனம் மாறும்வரை.

No comments:

Post a Comment