Monday, August 17

தனிமை தேடி


குடும்பம் என்னும் கைவிலங்கு

கைககளை இறுக்கியபடியிருக்க

மகளாய்,
சகோதரியாய்,
மனைவியாய்,
மருமகளாய்,
தாயாய் ...

தனியொருவளாக
கைவிலங்குகள் அறுபட
தனிமை தேடி பயணப்பட
நானென்ன
சித்தார்த்தனா?
யசோதை அல்லவா!!!

சாலைகூட யாருமற்று
நீண்டு கிடக்க...
செவ்வானமும்
என் தனி வருகைக்குக்
காத்திருப்பதாக சொல்லி
கண்சிமிட்டியது.

அவ்வப்போது
கைவிலங்கோடு
கண்மூடி தனிமை கொள்கிறேன்.
செவ்வானமும்
நீள்பாதையும்
இன்னும் எனக்காக
காத்திருக்கின்றன
தனிமையில்!!!

No comments:

Post a Comment